/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழந்தைகளை வைத்து ரயிலில் பிச்சை எடுத்த 3 வடமாநில பெண்கள் கைது
/
குழந்தைகளை வைத்து ரயிலில் பிச்சை எடுத்த 3 வடமாநில பெண்கள் கைது
குழந்தைகளை வைத்து ரயிலில் பிச்சை எடுத்த 3 வடமாநில பெண்கள் கைது
குழந்தைகளை வைத்து ரயிலில் பிச்சை எடுத்த 3 வடமாநில பெண்கள் கைது
ADDED : நவ 21, 2024 12:04 AM

பரங்கிமலை:மின்சார ரயில்களில், ஏழு குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த, வடமாநில பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஏழு குழந்தைகளும், மூன்று பெண்களும், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தாம்பரம்- - கடற்கரை செல்லும் மின்சார ரயில்களில், குழந்தைகளுடன் பிச்சை எடுப்பவர்கள், பயணியருக்கு தொந்தரவு அளித்து வருவதாக, பரங்கிமலை ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
மாவட்ட குழந்தைகள் நல துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு தன்னர்வலர்கள் ஆகியோருடன் இணைந்து, பரங்கிமலை ரயில்வே இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் குமார் தலைமையிலான போலீசார், ரயில்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மீனம்பாக்கம், திரிசூலம் பகுதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த மூன்று பெண்கள் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து, இரண்டு மாத கைக்குழந்தை உள்ளிட்ட ஏழு சிறார் - சிறுமியரை மீட்டனர். விசாரணையில், எங்களின் குழந்தைகள்தான் என, மூன்று பெண்களும் கூறினர். மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்தனர், பின், ஏழு குழந்தைகளுடன், மூன்று பெண்களையும், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குழந்தை பருவ பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மாலிம் கூறுகையில்,''ரயில்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், நலக்குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, யாருடைய குழந்தைகள் என, விசாரிக்கப்படும்,'' என்றார்.