/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலைவாய்ப்பு முகாமில் 33 பேருக்கு பணி ஆணை
/
வேலைவாய்ப்பு முகாமில் 33 பேருக்கு பணி ஆணை
ADDED : ஏப் 25, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 33 பேருக்கு நேற்று, பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடத்தின.
இந்த முகாமில், 34 வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில், 269 பேர் பங்கேற்றதில், 33 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேலு, இந்த பணி ஆணைகளை வழங்கினார்.

