/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 353 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 353 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜன 27, 2025 11:10 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 353 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. சப் - கலெக்டர் நாராயணசர்மா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லத்தில் வீடு ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, சிறு தொழில் துவங்க வங்கிக் கடன், மகளிர் உரிமைத்தொகை, மழைநீர் கால்வாய் துார்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 353 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்.