sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

/

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்


ADDED : செப் 28, 2024 05:14 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை அருகே, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. பதிவாளராக வைத்தியலிங்கம் உள்ளார்.

இவர், நேற்று அலுவலகம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு சென்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை எஸ்.பி., சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

மாலை 5:00 மணிக்கு துவங்கிய சோதனை, இரவு வரை நீடித்தது. இடம் மற்றும் வீடு தொடர்பாக பதிவு செய்ய வந்தவர்களை சோதனை செய்தே வெளியே அனுப்பினர்.

ஆய்வுக்கு பின் அதிகாரிகளிடம் கேட்டபோது, “சோதனையில் கணக்கில் வராத 4.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பொறுப்பு சார் - பதிவாளர் ஆனந்தமுத்து, 45,விடம் விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us