sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 டேங்கர் லாரிகள்

/

தாம்பரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 டேங்கர் லாரிகள்

தாம்பரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 டேங்கர் லாரிகள்

தாம்பரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ரூ.1.10 கோடியில் 4 டேங்கர் லாரிகள்


ADDED : டிச 17, 2024 09:26 PM

Google News

ADDED : டிச 17, 2024 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்களிலும், இணைப்பு இல்லாத பகுதி மற்றும் அவசரத்திற்கு குடிநீர் வழங்க ஏதுவாக, 1.10 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட நான்கு டேங்கர் லாரிகள், பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு, வாலாஜாபாத்தை அடுத்த பழைய சீவரம், மேலச்சேரி, வில்லியம்பாக்கம் பகுதிகளில் பாலாற்று படுகையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது.

பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

மேலும் புதியதாக உருவான இணைப்பு இல்லாத பகுதிகள், குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளில், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சொந்தமாக லாரிகள் இல்லாததால், வாடகை லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்கின்றனர்.

இதற்காக, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவாகிறது. இதை தடுக்கும் பொருட்டு, மாநகராட்சி லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 1.10 கோடி ரூபாய் செலவில், நான்கு டேங்கர் லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த லாரிகள் ஒவ்வொன்றும், தலா, 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை.

நான்கு லாரிகளும், நேற்று முன்தினம் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 4வது மண்டலத்தில் சொந்தமாக லாரி உள்ளதால், புதியதாக வாங்கப்பட்ட லாரிகள், மற்ற மண்டலங்களில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us