/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை தடத்தில் இன்று 44 ரயில் சேவை ரத்து
/
செங்கை தடத்தில் இன்று 44 ரயில் சேவை ரத்து
ADDED : பிப் 18, 2024 05:29 AM

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் இன்று 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே, இன்று காலை 11:00 மணி முதல் மாலை 3:15 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.
இதனால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
↓சென்னை கடற்கரை - தாம்பரம், காலை 10:30, காலை 10:40, 10:50, 11:10, 11:20, 11:30, 11:40, மதியம் 12:00, 12:10, 12:20, 12:40 ரயில்கள்; கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 11:00, 11:50, மதியம் 12:30, 12:50 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது
↓கடற்கரை - தாம்பரம், மதியம் 1:15, 1:30, சென்ட்ரல் - அரக்கோணம் மதியம் 1:00, சென்ட்ரல் - செங்கல்பட்டு மதியம் 1:45, 2:00, 2:15, 2:30 மணி ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது
↓தாம்பரம் - கடற்கரை காலை 10:05, 10:25, 10:45, 10:55, 11:05, 11:25, 11:35, மதியம் 12:00, 12:15, 12:45, 1:30, 1:45, 2:15, மாலை 4:30 ரயில்கள் சேவை ரத்தாகிறது
↓செங்கல்பட்டு - கடற்கரை காலை 9:40, 10:55, 11:30, மதியம் 12:00, 1:00, காஞ்சிபுரம் - கடற்கரை, காலை 9:30, திருமால்பூர் - கடற்கரை காலை 11:05 மணி ரயில்களின் சேவை, இன்று ரத்து செய்யப்படுகிறது
சிறப்பு ரயில்கள்
↓தாம்பரம் - செங்கல்பட்டுக்கு காலை 11:55, மதியம் 12:45, 1:25, 1:45, 1:55, 2:40, 2:55 மணிக்கு பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது
↓செங்கல்பட்டு - தாம்பரத்துக்கு காலை 9:30, 9:40, 10:55, 11:05, 11:30, மதியம் 12:00, 1:00 மணிக்கு, பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்துகள்
ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், தாம்பரம் வழித்தடத்தில் இரவு 11:45 மணி முதல் அதிகாலை 4:30 வரை, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளோடு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும்.
கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்
கோடம்பாக்கம் - தாம்பரம் வழித்தடத்தில் ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 3:15 மணி வரை ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணியரின் வசதிக்காக, மேற்கண்ட வழித்தடத்தில் தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்.
முக்கிய பேருந்து நிலையங்களில், அதிகாரிகளை நியமித்து பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், இன்று முதல் 22ம் தேதி வரை, மற்றொரு பிரிவாக தாம்பரம் தடத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், இரவு 11:45 மணிமுதல் அதிகாலை 4:30 வரை ரத்து செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட வழித்தடங்களிலும் இரவு 11:45 மணி முதல் அதிகாலை 4:30 வரை, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளோடு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், இன்று முதல் வரும் 22ம் தேதி வரை மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
↓சென்னை கடற்கரை -- தாம்பரத்துக்கு வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 8:15, 9:30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன
↓சென்னை கடற்கரை -- தாம்பரத்துக்கு இன்று இரவு 8:20, 9:30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஒரு பகுதி ரத்து
↓தாம்பரம் -- சென்னை கடற்கரைக்கு, வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 11:20, 11:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்
↓செங்கல்பட்டு -- சென்னை கடற்கரைக்கு, வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 11:00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்
↓கடற்கரை -- தாம்பரத்திற்கு இன்று இரவு 11:15, 11:35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்
↓செங்கல்பட்டு -- சென்னை கடற்கரைக்கு இன்று இரவு 11:00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்து உள்ளது.