sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுமி பலாத்கார வழக்கு 44 வயது நபருக்கு ஆயுள்

/

சிறுமி பலாத்கார வழக்கு 44 வயது நபருக்கு ஆயுள்

சிறுமி பலாத்கார வழக்கு 44 வயது நபருக்கு ஆயுள்

சிறுமி பலாத்கார வழக்கு 44 வயது நபருக்கு ஆயுள்


ADDED : ஜூலை 25, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல்மருவத்துார் மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 12 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார்.

கடந்த 2018 அக்., 10ம் தேதி, சிறுமி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகதாஸ், 44, என்பவர், சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, மேல்மருவத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், நாகதாசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதம் விதித்தும், கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறு மிக்கு இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின், நாகதாஸை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us