sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிரியாணி கடையில் ரகளை மறைமலைநகரில் 5 பேர் கைது

/

பிரியாணி கடையில் ரகளை மறைமலைநகரில் 5 பேர் கைது

பிரியாணி கடையில் ரகளை மறைமலைநகரில் 5 பேர் கைது

பிரியாணி கடையில் ரகளை மறைமலைநகரில் 5 பேர் கைது


ADDED : பிப் 25, 2025 07:47 PM

Google News

ADDED : பிப் 25, 2025 07:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் 'என்.ஹெச்.1' பகுதியைச் சேர்ந்தவர் உரிமைநாதன்,48. இவர், மறைமலைநகர் பாவேந்தர் சாலையில், நியூ ஆற்காடு பிரியாணி என்ற பெயரில், பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

கடந்த 23ம் தேதி இரவு, இந்த கடைக்கு வந்த காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சச்சின்,19, அவரது நண்பர் தமிழ்ச்செல்வன்,20, ஆகியோர், பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்துள்ளனர்.

பின், தகராறு செய்துவிட்டுச் சென்று உள்ளனர்.

சிறிது நேரம் கழித்து, தன் நண்பர்கள் சிலருடன் வந்த சச்சின், பிரியாணி கடையில் இருந்த பொருட்களை உடைத்து, அங்கு பணிபுரிந்து வந்த நபர்களையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து உரிமைநாதன், மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து விசாரித்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சச்சின், சந்துரு,27, சூர்யா,23, தினேஷ்,27, சுபீஷ்,18, உள்ளிட்ட ஐந்து பேரை நேற்று கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us