/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 395 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 395 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 30, 2025 12:24 AM
செங்கல்பட்டு;செங்கல்பட்டில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 395 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி, கலைஞர் கனவு இல்ல வீடு, முதியோர் உதவித்தொகை, குறைந்த மின்னழுத்தம், பட்டா மாற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 395 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.