/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'ஜிம்' மாஸ்டர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு
/
'ஜிம்' மாஸ்டர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு
ADDED : டிச 29, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவந்தாங்கல்,
நங்கநல்லுார், 5வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 40; ஜிம் மாஸ்டர். இவர், நேற்று முன்தினம் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு, மதுராந்தகம் சென்றார்.
நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை திறந்து, அதில் இருந்த, 50 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்படி, பழவந்தாங்கல் போலீசார், தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.