/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுங்குன்றம் கடைகளில் 6 கிலோ குட்கா பறிமுதல்
/
சிறுங்குன்றம் கடைகளில் 6 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : அக் 22, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா விற்கப்படுவதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில், போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள நாகராஜன், 58, என்பவரின் பெட்டி கடையில் இருந்த 4 கிலோ குட்கா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், கோமளா, 49, என்பவர் நடத்திய கடையிலும், 2 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருப்பது தெரிந்தது.
அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.