sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

632 சாலை சீரமைப்பு பணி மார்ச் 15க்குள் துவக்க கெடு

/

632 சாலை சீரமைப்பு பணி மார்ச் 15க்குள் துவக்க கெடு

632 சாலை சீரமைப்பு பணி மார்ச் 15க்குள் துவக்க கெடு

632 சாலை சீரமைப்பு பணி மார்ச் 15க்குள் துவக்க கெடு


ADDED : பிப் 04, 2024 02:20 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார்:இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 192 முதல் 200 வரை வார்டுகள் உள்ளன. இதில், 2,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

குடிநீர், கழிவுநீர், எரிவாயு குழாய் பதிப்பு, மின்கேபிள் பதிப்பு போன்ற பணிகளால், சாலைகள் மோசமாக உள்ளன. மேலும், சீரமைத்து மூன்று ஆண்டுக்கு மேலான சாலைகள், மழையால் சேதமடைந்த சாலைகள் என, 114 கி.மீ., துாரத்தில், 632 சாலைகள் புதுப்பிக்க வேண்டி இருந்தன.

இதற்காக, மாநில நிதித்திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு நிதி உதவி திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் சிங்கார சென்னை ஆகிய திட்டங்களின் கீழ், 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில், பழைய சாலையை சுரண்டி எடுத்து, தார் மற்றும் சிமென்ட் சாலை போடப்படுகிறது. எட்டு ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, இப்பணிகள் நடக்கின்றன.

அனைத்து ஒப்பந்த நிறுவனங்களும், மார்ச் 15ம் தேதிக்குள் பணியை துவங்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால், சாலை பணிகள் வேகம் எடுத்துள்ளன.






      Dinamalar
      Follow us