sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இந்தலுாரில் வெறிநாய் கடித்து 7 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

/

இந்தலுாரில் வெறிநாய் கடித்து 7 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

இந்தலுாரில் வெறிநாய் கடித்து 7 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

இந்தலுாரில் வெறிநாய் கடித்து 7 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு


ADDED : ஆக 19, 2025 12:13 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர், இந்தலுார் கிராமத்தில், வெறிநாய் கடித்து, ஏழு செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

சித்தாமூர் அடுத்த இந்தலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி, 45. இவர், ஐந்து ஆண்டுகளாக செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று காலை 9:00 மணியளவில், வழக்கம் போல மேய்ச்சலுக்குச் அழைத்துச் செல்ல, வீட்டின் அருகே உள்ள பட்டியில் இருந்து ஆடுகளை வெளியேற்றினார். அப்போது, அதிலிருந்த 12 ஆடுகளை, வெறிநாய் கடித்தது தெரிந்தது. இதில், ஏழு ஆடுகள் பலியாகி இருந்தன. ஐந்து ஆடுகள் படுகாயமடைந்து இருந்தன.

தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்.

இதேபோல இப்பகுதியில், கடந்த 15ம் தேதி, வீரன் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஆடுகள், வெறிநாய் கடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இப்பகுதியில் வெறிநாய் கடித்து ஆடுகள் பலியாவதால், சாலையில் திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us