/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணை திசை திருப்பி ரூ.70,000 'ஆட்டை'
/
பெண்ணை திசை திருப்பி ரூ.70,000 'ஆட்டை'
ADDED : செப் 22, 2024 03:42 AM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லி, 51. இவர், நேற்று மதியம் தன் மனைவி பூஷ்ணம், 49, என்பவருடன், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள வங்கியில், நகையை அடகு வைத்து 70,000 ரூபாய் பெற்றார்.
இதையடுத்து, பூஷ்ணத்தின் கைப்பையில் பணத்தை வைத்துக்கொண்டு, சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் அடகு கடையில், ஏற்கனவே வைத்திருந்த நகைகளை மீட்க சென்றனர்.
அனுமந்தபுரம் சாலையில் உள்ள கடையில் இருவரும் ஜூஸ் குடித்து கொண்டிருந்தனர். அப்போது, பொடி தூள் போல ஏதோ விழவே, இருவருக்கும் உடல் முழுதும் அரிப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த இளைஞர்கள் தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர். அதன்பின், பூஷ்ணம் பையை எடுத்து பார்த்த போது, 70,000 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, பூஷ்ணம் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார்அளித்தார்.