/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரியில் 87 லட்சம் பேர் பயணம்
/
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரியில் 87 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரியில் 87 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரியில் 87 லட்சம் பேர் பயணம்
ADDED : பிப் 02, 2025 12:24 AM
சென்னை சென்னை மெட்ரோ ரயில்களில், கடந்த மாதத்தில் மட்டும், 86 லட்சத்து 99 ஆயிரத்து 344 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில், இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில், தினமும் மூன்று லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும், 86 லட்சத்து 99 ஆயிரத்து 344 பேர் பயணம் செய்துள்ளனர்.
கடந்த மாதம், 10ம் தேதியில், அதிகபட்சமாக மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 997 பேர் பயணம் செய்துள்ளனர்.
க்யூ.ஆர்., குறியீடு டிக்கெட் முறையைப் பயன்படுத்தி, 37 லட்சத்து 80 ஆயிரத்து 386 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி, 23 லட்சத்து 78 ஆயிரத்து 989 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பேரும் பயணித்துள்ளனர்.
அதேபோல், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி, 7,219 பேரும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, 25 லட்சத்து 30 ஆயிரத்து 950 பேரும் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், க்யூ.ஆர்., குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டை, வாட்ஸாப் டிக்கெட் உள்ளிட்டவற்றுக்கு, 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.