sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தண்டவாளத்தில் 5 அடி நீள இரும்பு துண்டு வண்டலுாரில் கொல்லம் ரயில் தப்பியது

/

தண்டவாளத்தில் 5 அடி நீள இரும்பு துண்டு வண்டலுாரில் கொல்லம் ரயில் தப்பியது

தண்டவாளத்தில் 5 அடி நீள இரும்பு துண்டு வண்டலுாரில் கொல்லம் ரயில் தப்பியது

தண்டவாளத்தில் 5 அடி நீள இரும்பு துண்டு வண்டலுாரில் கொல்லம் ரயில் தப்பியது


ADDED : ஜன 05, 2025 01:17 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை நோக்கி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் வரும்போது, தண்டவாளத்தில் இருந்து அதிக சத்தம் எழுந்துள்ளது.

அதை கவனித்த ரயில் இன்ஜின் டிரைவர் எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தி, எக்ஸ்பிரஸ் ஹைலைட்டை நிறுத்தினார். தொடர்ந்து மெதுவாக பயணித்த ரயில் வண்டலுார் ரயில் நிலையத்தில் நடைமேடை இரண்டில் உள்ள தண்டவாளத்தில் இருந்த, இரும்பு ராடு மீது சக்கரம் உரசியவாறு நின்றது.

தொடர்ந்து, டிரைவர் கொடுத்த புகாரின்படி வண்டலுார் ரயில் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து, ஆய்வு செய்தனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின், தாம்பரத்தில் இருந்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டனர். தண்டவாளத்தில் இருந்த 5 அடி நீளமுள்ள இரும்பு ராடு அகற்றப்பட்டது. அதன் எடை 100 கிலோவுக்கு மேல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கொல்லம் ரயில் 2 மணி நேரம் தாமதமாக சென்றது.

ரயில்வே அதிகாரிகளியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

வண்டலூர் ரயில் நிலையத்தில் சில நாட்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு பொருட்களை, பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கவனக்குறைவாக விட்டு சென்றுள்ளனர்.

இருந்த போதிலும், ரயில் இன்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இரும்பு பொருளை கவனக்குறைவாக விட்டு சென்ற ஊழியர் யார் என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us