sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கருநிலம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்

/

கருநிலம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்

கருநிலம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்

கருநிலம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்


ADDED : செப் 25, 2025 01:23 AM

Google News

ADDED : செப் 25, 2025 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில், தனியார் ரப்பர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நேற்று மாலை, புதுடில்லியில் இருந்து மூலப்பொருள் ஏற்றிக்கொண்டு, 'எய்ச்சர்' சரக்கு வாகனம் வந்தது.

அதன் பின், பொருட்களை தொழிற்சாலையில் இறக்கி விட்டு, வாகனம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, வாகனத்தின் பின்புறம் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது.

இதனைக் கண்ட தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இது குறித்து மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us