sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கந்தசுவாமி கோவிலில் சிறுவனை கடித்த குரங்கு

/

கந்தசுவாமி கோவிலில் சிறுவனை கடித்த குரங்கு

கந்தசுவாமி கோவிலில் சிறுவனை கடித்த குரங்கு

கந்தசுவாமி கோவிலில் சிறுவனை கடித்த குரங்கு


ADDED : மார் 06, 2024 12:10 AM

Google News

ADDED : மார் 06, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதால், அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

நேற்று, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியை சேர்ந்த யுவராஜ்- - நர்மதா தம்பதி, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.

அப்போது கோவில் வளாகத்தில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கு, அவர்களின் மகன் மித்னேஷ், 8, என்ற சிறுவனின் இடது கால் பகுதியை கடித்துவிட்டு தப்பியது.

சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் குரங்கை துரத்தி விட்டு, சிறுவனை மீட்டு, அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:

கோவில் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. குழுக்களாக உட்கார்ந்து கொண்டு, பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன.

ஆகையால், குரங்குளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். அப்போது தான் பக்தர்கள் நிம்மதியாக கோவிலுக்கு வந்து செல்ல முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us