/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை கடக்க முயன்றவர் புல்லட் பைக் மோதி பலி
/
சாலையை கடக்க முயன்றவர் புல்லட் பைக் மோதி பலி
ADDED : செப் 19, 2024 10:10 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம், பெரிய தெரு பகுதியில் வசித்து வந்தவர் கணேசன், 48. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு, கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரம் சிக்னலில், சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த, என்பீல்ட் ஹிமாலயா இருசக்கர வாகனம், அவர் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த கணேசன், தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, கணேசன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.