sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அனுமந்தை - குண்ணவாக்கம் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

/

அனுமந்தை - குண்ணவாக்கம் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

அனுமந்தை - குண்ணவாக்கம் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

அனுமந்தை - குண்ணவாக்கம் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை


ADDED : செப் 30, 2024 04:23 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில், குண்ணவாக்கம் - அனுமந்தை ஏரிக்கரை சாலை 2.கி.மீ., துாரம் உடையது.

இந்த சாலை வழியாக, குண்ணவாக்கம், ஈச்சங்கரணை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனங்கள் வழியாக, மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலை சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.

இதையடுத்து, புதிய சாலை அமைக்க, நான்கு மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டு, சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, ஏரிக்கரை ஓரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.

ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் பணிகள் துவங்காததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலையை அதிக அளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வேலைக்கு செல்கின்றனர். சாலையில் விரவப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் குத்தி, வாகனங்களின் டயர்கள் பஞ்சராவதால், வேலைக்கு செல்ல தடை ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, பொருளாதார இழப்பு, வீண் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us