sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதுப்பட்டு ஏரி மதகை சீரமைக்க வேண்டுகோள்

/

புதுப்பட்டு ஏரி மதகை சீரமைக்க வேண்டுகோள்

புதுப்பட்டு ஏரி மதகை சீரமைக்க வேண்டுகோள்

புதுப்பட்டு ஏரி மதகை சீரமைக்க வேண்டுகோள்


ADDED : அக் 09, 2024 11:02 PM

Google News

ADDED : அக் 09, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:செய்யூர் அருகே புதுப்பட்டு கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்த ஏரி வாயிலாக, புதுப்பட்டு, மேலப்பட்டு, சிறுவங்குணம் ஆகிய கிராமங்களில் உள்ள, 400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் நீர்ப்பாசனம் பெறுகின்றன.

கடந்த 2022ம் ஆண்டு, ஏரியின் மதகு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஏரிக்கரை உடைந்தது. பின், மரக்கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு, பொதுப்பணி துறையினர் வாயிலாக ஏரிக்கரை சீரமைக்கப்பட்டது.

ஏரிக்கரை உடைந்ததில் மதகுப்பகுதி முழுதும் சேதமடைந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், சேதமடைந்த மதகு சீரமைக்கப்படாததால் உள்ளதால், விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி இல்லாமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளின் நலன் கருதி, பழுதடைந்த மதகு பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us