sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

/

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

1


ADDED : ஜூன் 01, 2024 05:00 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 05:00 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: கடலுார் மாவட்டம், விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஹனீபா, 22.

இவர், கடந்த ஒரு வருடமாக, சிங்கபெருமாள் கோவிலில் வாடகை வீட்டில் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள 'யமாஹா' தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, முகமது ஹனீபா சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் நோக்கி, 'ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில் சென்றார்.

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தெள்ளிமேடு கிராமத்தை கடந்து சென்ற போது, பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது, முகமது ஹனீபாவின் இருசக்கர வாகனம் மோதியது.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த முகமது ஹனீபா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார், முகமது ஹனீபா உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us