ADDED : அக் 01, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, - நாமக்கல் மாவட்டம், கலியனுார் பகுதியைச் சேர்ந்தவர் கவுரிசங்கர், 26; பி.டெக் பட்டதாரி.
இவர், வேளச்சேரியில் தங்கி, 'டிரேடிங்' படித்துக்கொண்டு, மளிகை பொருள் டெலிவரி ஊழியராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி விரைவு சாலையில், 'ஹோண்டா சைன்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வேகமாக சென்ற வாகனம், சாலை மைய தடுப்பில் உரசி, மின்கம்பத்தில் மோதியது. இதில், கவுரிசங்கர் சம்பவ இடத்திலே பலியானார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.