sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பைக் மீது மோதிய சரக்கு லாரி சேந்தமங்கலத்தில் வாலிபர் பலி

/

 பைக் மீது மோதிய சரக்கு லாரி சேந்தமங்கலத்தில் வாலிபர் பலி

 பைக் மீது மோதிய சரக்கு லாரி சேந்தமங்கலத்தில் வாலிபர் பலி

 பைக் மீது மோதிய சரக்கு லாரி சேந்தமங்கலத்தில் வாலிபர் பலி


ADDED : நவ 28, 2025 04:06 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெரு மாள் கோவில் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த நாட்டரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 24; அதே பகுதியில், டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10:50 மணியளவில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், ஒரகடம் நோக்கி பஜாஜ் பல்சர் என்.எஸ்., பைக்கில் சென்றார். சேந்தமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லாரி, தங்கராஜ் சென்ற பைக் மீது மோதியது. இதில் அவர், சாலையின் நடுவே தடுமாறி விழுந்தார்.

அப்போது தங்கராஜ் தலையில், அதே சரக்கு லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவ லறிந்து வந்த பாலுார் போலீசார், தங் கராஜி ன் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us