/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
/
விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
ADDED : பிப் 06, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த ஆண்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் காளி, 44; கார் ஓட்டுனர். கடந்த 3ம் தேதி இரவு 8:30 மணிக்கு, மாமல்லபுரத்திலிருந்து காரணை நோக்கி, ஸ்பிளெண்டர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
சாலை விரிவாக்க பணியில் குவித்திருந்த மண் குவியலில் சிக்கி, சறுக்கி விழுந்து காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பலனின்றி நேற்று காலை 10:00 மணியளவில் இறந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.