sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆன்லைன் ரம்மி ரூ.10 லட்சம் இழந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு

/

ஆன்லைன் ரம்மி ரூ.10 லட்சம் இழந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு

ஆன்லைன் ரம்மி ரூ.10 லட்சம் இழந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு

ஆன்லைன் ரம்மி ரூ.10 லட்சம் இழந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு


ADDED : பிப் 05, 2025 01:49 AM

Google News

ADDED : பிப் 05, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 25. சுங்குவார்சத்திரத்தில், உறவினர் வீட்டில் தங்கி ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்தார்.

'ஆன்லைன் ரம்மி' விளையாடி வந்த தமிழ்செல்வன், 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வன், கடந்த 3ம் தேதி இரவு 10:00 மணியளவில், திருவள்ளூர் - ஏகாட்டூர் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

'வாட்ஸப் ஸ்டேட்டஸ்'


தற்கொலை செய்த தமிழ்செல்வன், மொபைல் போனில், 'வாட்ஸப் ஸ்டேட்டஸ்-' வைத்துள்ளார்.

அதில், 'எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் பண்ண தப்ப, நானே சரி பண்றேன். ஒரே ஒரு வேண்டுகோள், என்னை மாதிரி யாரும் ஆன்லைன் கேம் ஆடாதீங்க; 6 ஆண்டு கஷ்டப்பட்ட என்கிட்ட இப்போது ஒன்னும் இல்லாம போச்சு; அப்பா, அம்மாவுக்குக்கூட எதுவும் பண்ணலை' என பதிவிட்டிருப்பதாக, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us