/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்தில் சிக்கிய ஆவின் பால் லாரி
/
விபத்தில் சிக்கிய ஆவின் பால் லாரி
ADDED : ஜன 18, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:ஈரோடு மாவட்டம், பவானியில் இருந்து சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணைக்கு 15 ஆயிரம் லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று காலை வந்து கொண்டிருந்தது. டேங்கர் லாரியை பவானியை சேர்ந்த பழனிச்சாமி, 55.என்பவர் ஓட்டினார்.
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் அருகில் வந்த போது லாரியின் முன்பக்க டயர் பஞ்சரானதில் கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓரம் இருந்த சிமெண்ட் தடுப்பில் மோதி நின்றது. பழனிச்சாமி காயமின்றி தப்பினார்.