ADDED : ஜூலை 20, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,:கஞ்சா விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.
கிழக்கு தாம்பரம், பாலாஜி நகரை சேர்ந்தவர் உதயா, 30. 'ஏ பிளஸ்' ரவுடி. தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில், இவர் மீது கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த உதயாவை, தாம்பரம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.