sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்சாரம் பாய்ந்து 'ஏசி' மெக்கானிக் பலி

/

மின்சாரம் பாய்ந்து 'ஏசி' மெக்கானிக் பலி

மின்சாரம் பாய்ந்து 'ஏசி' மெக்கானிக் பலி

மின்சாரம் பாய்ந்து 'ஏசி' மெக்கானிக் பலி


ADDED : டிச 26, 2024 09:27 PM

Google News

ADDED : டிச 26, 2024 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பம்மல்:பம்மல், எல்.ஐ.சி., காலனி, 3வது குறுக்கு தெரு, பாபா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நரேஷ்குமார், 32. ஏசி மெக்கானிக்.

இவருக்கு திருமணமாகி, தானுப்பிரியா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் தானுப்பிரியா, மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நரேஷ்குமார் மட்டும் தனியாக இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், மதுரையில் இருந்து கணவருக்கு தானுப்பிரியா போன் செய்தார்.

போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், நரேஷ்குமாரின் சகோதரர் சரவணனிடம், வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

சரவணன் சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பெயரை கூறி அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை.

பின், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, நரேஷ்குமார் குளியலறையில் மின்சாரம் பாய்ந்து, நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.

போலீசார் விரைந்து வந்து, நரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us