sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சேதமடைந்த மின்கம்பத்தால் நயினார்குப்பத்தில் விபத்து அபாயம்

/

சேதமடைந்த மின்கம்பத்தால் நயினார்குப்பத்தில் விபத்து அபாயம்

சேதமடைந்த மின்கம்பத்தால் நயினார்குப்பத்தில் விபத்து அபாயம்

சேதமடைந்த மின்கம்பத்தால் நயினார்குப்பத்தில் விபத்து அபாயம்


ADDED : பிப் 02, 2025 12:12 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிக்கு கடப்பாக்கம் துணை மின்பகிர்வு மனை மூலமாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நயினார்குப்பம், காளியம்மன் கோவில் அருகே குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் செய்ய சாலை ஓரம் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம் பழுதடைந்து, சிமென்ட் கலவைகள் உதிர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்து எலும்பு கூடுபோல காட்சியளிக்கிறது.

இதனால் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us