/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயணியர் நிழற்குடை சேதம் சீரமைக்க நடவடிக்கை தேவை
/
பயணியர் நிழற்குடை சேதம் சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 17, 2024 07:34 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த ராயமங்கலம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வாசிகள் பயன்பெறும் வகையில், இங்கு பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளது.
இதில், இப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் வெயில் மற்றும் மழைக் காலங்களில் நின்று பேருந்து ஏறிச்செல்கின்றனர்.
தற்போது, இந்த பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளது. மேலும், நிழற்குடையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், நிழற்கூடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பழுதடைந்துள்ள பயணியர் நிழற்கூடையை சீரமைக்க, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.