sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரத்திலிருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்

/

தாம்பரத்திலிருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்

தாம்பரத்திலிருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்

தாம்பரத்திலிருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்


ADDED : நவ 13, 2024 08:15 PM

Google News

ADDED : நவ 13, 2024 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பயணியரின் தேவைக்கு ஏற்ப, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு, 40 பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையின் மத்திய பகுதியில் இருப்பவர்கள், தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி, வெளியூர் பஸ்களை பிடித்து செல்ல வசதியாக உள்ளது.

குறிப்பாக, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு தினமும், 40 பஸ்களை இயக்கி வருகிறோம். தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், தேவைக்கு ஏற்ப அதிகரித்து இயக்கி வருகிறோம்.

இடநெருக்கடி இருப்பதால், ஒரே நேரத்தில் பஸ்களை வரிசையாக நிறுத்த முடியாது. எனவே, கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு, தாம்பரம் வந்து, பின் வெளியூர்களுக்கு பஸ்களை இயக்கி வருகிறோம்.

சில வாரங்களாக, கூடுதலாக 40 பஸ்களை வரை அதிகரித்து இயக்கி வருகிறோம். கூட்ட நெரிசல் அதிகரிக்கும்போது, கூடுதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us