sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிதிலமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் கூடலுாரில் நிர்வாக ஆவணங்கள் நாசம்

/

சிதிலமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் கூடலுாரில் நிர்வாக ஆவணங்கள் நாசம்

சிதிலமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் கூடலுாரில் நிர்வாக ஆவணங்கள் நாசம்

சிதிலமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் கூடலுாரில் நிர்வாக ஆவணங்கள் நாசம்


ADDED : டிச 25, 2024 01:51 AM

Google News

ADDED : டிச 25, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:கூடலுார் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், நடுநிலைப் பள்ளி அருகே, பெரும்பாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது.

கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பதால் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இதனால், சமீபத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையில், அலுவலகத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு, அபாய நிலையில் உள்ளது.

இதன் காரணமாக, மழைக்காலங்களில் கிராம நிர்வாக பதிவேடுகள், ஆவணங்கள் நனைந்து நாசமாகி வருகின்றன. முக்கிய ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.

எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us