sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

/

பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி


ADDED : ஏப் 28, 2025 03:12 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரி, 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, இளநிலை பிரிவில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம்; பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், வேதியியல், இயற்பியல்; பி.சி.ஏ., மற்றும் பி.காம்., பொது, நிறுவன மேலாண்மை ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

முதுநிலை பிரிவில், எம்.ஏ., தமிழ், எம்.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம் மற்றும் எம்.காம்., பொது ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

மொத்தம் 1,200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். கடந்த ஆண்டு மாணவ - மாணவியர் சேர்க்கை குறைந்தது.

அதனால், வரும் கல்வியாண்டில், 100 சதவீத சேர்க்கையை வலியுறுத்தி, நேற்று முன்தினம் பெரும்பாக்கத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதில், கல்லுாரி, காவல் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.

கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:

கல்லுாரியில் ஆய்வகம், நுாலகம், கலையரங்கம், கிரிக்கெட், கபடி விளையாட்டு மைதானம், விடுதி மற்றும் கல்லுாரி வரை பேருந்து வசதி உள்ளது.

விபரங்களுக்கு, கல்லுாரியில் நேரில் அணுகலாம். மேலும், 79042 50370 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us