/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழந்தைகள் மையங்களில் சேர்க்கை துவக்கம்
/
குழந்தைகள் மையங்களில் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூன் 04, 2025 12:54 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில், சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் வாயிலாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த, செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,267 குழந்தைகள் மையங்கள் உள்ளன.
இந்த மையத்தில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன. 2 வயது முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவ கல்வி, செய்கை பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
குழந்தைகள் மைய பணியாளர்கள், வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அடிப்படை கல்வி மேம்பட, வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில், உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம். 2025 - 26ம் ஆண்டிற்கான முன்பருவ கல்வி சேர்க்கை, கடந்த 2ம் தேதியிலிந்து துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு, அங்கன்வாடி மையங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.