sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில்ஆளவந்தார் அறக்கட்டளை பிரபந்த சேவை

/

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில்ஆளவந்தார் அறக்கட்டளை பிரபந்த சேவை

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில்ஆளவந்தார் அறக்கட்டளை பிரபந்த சேவை

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில்ஆளவந்தார் அறக்கட்டளை பிரபந்த சேவை


ADDED : அக் 04, 2024 08:41 PM

Google News

ADDED : அக் 04, 2024 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை இயங்குகிறது. அதற்கு சொந்தமாக, மாமல்லபுரம் - வடநெம்மேலி இடையே உள்ள கடலோர இடங்களில், 1,054 ஏக்கர் நிலம் உள்ளது.

கடந்த நுாற்றாண்டில் வாழ்ந்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார் என்பவர், அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை, சவுக்கு பயிரிட்டு வளப்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்தினார். இதையடுத்து, ஆங்கிலேய அரசு, அந்நிலங்களை அவருக்கு இலவசமாக அளித்தது.

பிரம்மச்சாரியான அவர், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, சொத்துக்களில் கிடைத்த வருவாயை, ஆன்மிக, தர்ம செயல்களுக்கு பயன்படுத்தினார்.

ஆளவந்தார் அறக்கட்டளை ஏற்படுத்தி, உயில் பதிந்தார். அவர் மறைந்த பின், சொத்துக்களை உறவினர் நிர்வகிப்பதில் ஏற்பட்ட சிக்கலால், நீதிமன்றம் நிர்வகித்து, இறுதியில் ஹிந்து சமய அறநிலையத்துறையிரம் ஒப்படைக்கப்பட்டது.

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களில், உற்சவங்கள் நடத்தி, அன்னதானம் வழங்க, உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறக்கட்டளை நிர்வாகமும், அவ்வாறே செயல்படுத்துகிறது. திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில், அறக்கட்டளை நிர்வாகம் சேவையாற்றும்.

தற்போது, 137ம் ஆண்டாக, செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில், மாமல்லபுரம் பகுதி பாகவதர், ஆண்டாள் குழுவினர், திருப்பதியில் முகாமிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் துவங்கி, வரும் 13ம் தேதி வரை, தினமும் காலை சிறப்பு வழிபாடு நடத்தி, நாலாயிர பிரபந்த சேவையாற்றி, பாசுர பாடல்கள் பாடி, மூன்று வேளை அன்னதானம் வழங்குகின்றனர். உண்டியல் காணிக்கையாக, 50,000 ரூபாய் செலுத்த உள்ளதாக, செயல் அலுவலர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us