sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உடல் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மதுராந்தகத்தில் கவிழ்ந்து விபத்து

/

உடல் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மதுராந்தகத்தில் கவிழ்ந்து விபத்து

உடல் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மதுராந்தகத்தில் கவிழ்ந்து விபத்து

உடல் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மதுராந்தகத்தில் கவிழ்ந்து விபத்து


ADDED : மார் 24, 2025 01:10 AM

Google News

ADDED : மார் 24, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி, 46. இவரது, கணவர் குட்டி, 50, என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக, புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தாம்பரம் பகுதியிலுள்ள வீட்டிற்கு, புதுச்சேரியில் இருந்து தனியார் ஆம்புலன்சில் எடுத்து வந்துள்ளனர்.

அப்போது, மதுராந்தகம் அடுத்த அத்திமனம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வடமாநில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளனர்.

அவர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதாமல் இருக்க, ஓட்டுனர் திடீரென 'பிரேக்' பிடித்துள்ளார்.

இதில் ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி, சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், ஆம்புலன்சில் பயணம் செய்த குட்டியின் மனைவி தேவி, மகன் இளங்கோ, உறவினர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உடனே, வேறு ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு, உடலை தாம்பரத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இந்த விபத்து குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us