sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பால் ஷீலிங் விழுந்ததால் 'அம்மா' உணவகம் மூடல்

/

பால் ஷீலிங் விழுந்ததால் 'அம்மா' உணவகம் மூடல்

பால் ஷீலிங் விழுந்ததால் 'அம்மா' உணவகம் மூடல்

பால் ஷீலிங் விழுந்ததால் 'அம்மா' உணவகம் மூடல்


ADDED : நவ 27, 2024 11:59 PM

Google News

ADDED : நவ 27, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பம்மல்:தாம்பரம் மாநகராட்சியில், ஏழு 'அம்மா' உணவகங்கள் செயல்படுகின்றன. இதில், 1வது மண்டலம், பம்மல், அண்ணா சாலையில் 'அம்மா' உணவகம் உள்ளது.

நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், இங்கு உணவு அருந்துகின்றனர்.

இந்த உணவகத்தின் கூரை, சிமென்ட் அட்டையால் போட்டப்பட்டது. வெயில் காலத்தில் வாடிக்கையாளர்கள் சிரமப்படாமல் இருக்க, 'பால் ஷீலிங்' அமைக்கப்பட்டிருந்தது. இதன் பூச்சு அவ்வப்போது விழுந்து வந்தது.

இந்த நிலையில், பால் ஷீலிங்கின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், அங்கு புணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பால் ஷீலிங் முழுதாக அகற்றப்பட்டது. பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பம்மல் அம்மா உணவகம் நேற்று மூடப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பால் ஷீலிங் உடைந்து விழவில்லை. பலவீனமடைந்து விழும் நிலையில் இருந்ததால், அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெண் ஊழியர் மீது விழுந்துவிட்டது' என்றனர்.






      Dinamalar
      Follow us