sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குண்டும், குழியுமாக மாறிய அம்மணம்பாக்கம் சாலை

/

குண்டும், குழியுமாக மாறிய அம்மணம்பாக்கம் சாலை

குண்டும், குழியுமாக மாறிய அம்மணம்பாக்கம் சாலை

குண்டும், குழியுமாக மாறிய அம்மணம்பாக்கம் சாலை


ADDED : ஏப் 19, 2025 01:40 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வல்லம் ஊராட்சி, அம்மணம்பாக்கம் - திருப்போரூர் கூட்டு சாலை 3 கி.மீ., உள்ளது.

இந்த சாலை வழியாக மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும்.

இந்த சாலையை திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் அம்மணம்பாக்கம் சுடுகாடு பகுதியில் இருந்து திருப்போரூர் சாலை இணைப்பு வரை பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. வாகனங்கள் டயர்கள் அடிக்கடி பஞ்சராவதால் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால் இரவு மணி முடித்து செல்லும் போது அச்ச உணர்வுடன் செல்லும் நிலை உள்ளது. இந்த சாலையில் ஒருபுறம் காப்பு காடுகள் உள்ளதால் வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க அனுமதி அளிப்பதில் சிக்கல் உள்ளது.

பொது மக்கள் சிரமத்தை உணர்ந்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us