sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இடியும் நிலையில் மகளிர் கழிப்பறை அங்கன்வாடி குழந்தைகள் அச்சம்

/

இடியும் நிலையில் மகளிர் கழிப்பறை அங்கன்வாடி குழந்தைகள் அச்சம்

இடியும் நிலையில் மகளிர் கழிப்பறை அங்கன்வாடி குழந்தைகள் அச்சம்

இடியும் நிலையில் மகளிர் கழிப்பறை அங்கன்வாடி குழந்தைகள் அச்சம்


ADDED : டிச 17, 2024 11:38 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இங்குள்ள அம்பேத்கர் நகர் பகுதியில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதன் அருகே, மகளிர் பயன்பாட்டிற்காக, 12 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.

தற்போது பயன்பாடின்றி பழுதடைந்து, கழிப்பறை வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இங்கு, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலவுகின்றன.

கழிப்பறையின் 'செப்டிக் டேங்க்' மூடப்படாமல், திறந்து நிலையில் உள்ளது. இதனால், அருகில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மகளிர் கழிப்பறை வளாகத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர், ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஆனால், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us