sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அனுமந்தபுரம் சாலை நடுவே மரண பள்ளங்களால் அச்சம்

/

அனுமந்தபுரம் சாலை நடுவே மரண பள்ளங்களால் அச்சம்

அனுமந்தபுரம் சாலை நடுவே மரண பள்ளங்களால் அச்சம்

அனுமந்தபுரம் சாலை நடுவே மரண பள்ளங்களால் அச்சம்


ADDED : அக் 11, 2024 12:53 AM

Google News

ADDED : அக் 11, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., நீளம் உடையது. இச்சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.

தென்மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, இச்சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே பள்ளங்கள் அதிகளவில் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வாகனங்கள் இரவு நேரங்களில் தடுமாறி வருகின்றன.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலை வழியாக இரண்டு மாதங்களுக்கு முன் மருதேரி ஏரியில் மண் எடுத்த போது, இவ்வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வந்தன.

இதன் காரணமாக, சாலையின் பல இடங்களில் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றன.

எனவே, இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us