sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : செப் 19, 2025 10:42 PM

Google News

ADDED : செப் 19, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தினமும் 750 ரூபாய் ஊதியத்தில், சமுதாய வள பயிற்றுநராக பணி செய்ய விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்கள் கற்றல் மையம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் சார்பில், மேலாண்மை பயிற்சி மையம் இயங்க உள்ளது. இதில், சமுதாய வள பயிற்றுநர் பணியை செய்ய, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த, ஐந்து வருட அனுபவம் வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களாக, கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

தவிர மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது, 5 முதல் 10 பயிற்சிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும். மொபைல் போன் செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராகவும் இருத்தல் அவசியம்.

மேலும், 21 வயது பூர்த்தியடைந்த நபராகவும், அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணிபுரிபவராகவும் இருக்கக் கூடாது.

தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபருக்கு, நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக 750, 500 மற்றும் 350 ரூபாய் வழங்கப்படும்.

தகுதி உடைய விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு என்ற முகவரியை அணுகலாம்.

மேலும், 98944 96522, 87782 40051, 98425 34416, 99768 60716, 96266 34105, 94444 74017, 95665 05051, 97519 40380 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us