sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மீன் மகசூல் மதிப்பீடு அறிவிக்காததால் ஏலம் தாமதம்

/

மீன் மகசூல் மதிப்பீடு அறிவிக்காததால் ஏலம் தாமதம்

மீன் மகசூல் மதிப்பீடு அறிவிக்காததால் ஏலம் தாமதம்

மீன் மகசூல் மதிப்பீடு அறிவிக்காததால் ஏலம் தாமதம்


ADDED : பிப் 14, 2025 10:49 PM

Google News

ADDED : பிப் 14, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம், கிளியாறு வடிநில உப கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செய்யூர், மதுராந்தகம் பகுதி ஏரிகளில், மீன் மகசூல் ஏலம் விட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம், செய்யூர் வட்டத்தில் கிளியாறு வடிநில உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில், 261 ஏரிகள் உள்ளன.

அதில், 229 ஏரிகளுக்கு, கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து, 2025 ஜூன் 30ம் தேதி வரை, பசலி ஆண்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மீன் மகசூல் மதிப்பீடு, தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளதால், மீன் குத்தகை ஏலம் விடப்படாமல் உள்ளது.

தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ளதால், ஏரிகளில் நீர் வற்றிவிடும் முன், விரைந்து ஏரிகளை ஏலம் விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நீர்வளத்துறை மதுராந்தகம் உதவி செயற்பொறியாளர் நீள்முடியோன் கூறியதாவது:

விவசாயிகளுக்கான நீர் தேவை பயன்பாடு, ஏரி பரப்பளவு, நீர் இருப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஏலம் விடப்படும்.

ஏரிகளில் மீன் மகசூல் மதிப்பீட்டை வழங்க ஆணையாளர், மீன்பிடி மற்றும் மீனவர் நலன் ஒருங்கிணைந்த அலுவலகம்,- சென்னை மற்றும் உதவி இயக்குனர், மீன்வளத்துறை, காஞ்சிபுரத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us