/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீன் மதிப்பீடு அறிவிக்காததால் ஏலம் தாமதம்
/
மீன் மதிப்பீடு அறிவிக்காததால் ஏலம் தாமதம்
ADDED : பிப் 15, 2025 12:39 AM
மதுராந்தகம்மதுராந்தகம், கிளியாறு வடிநில உப கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செய்யூர், மதுராந்தகம் பகுதி ஏரிகளில், மீன் மகசூல் ஏலம் விட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம், செய்யூர் வட்டத்தில் கிளியாறு வடிநில உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில், 261 ஏரிகள் உள்ளன.
அதில், 229 ஏரிகளுக்கு, கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து, 2025 ஜூன் 30ம் தேதி வரை, பசலி ஆண்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மீன் மகசூல் மதிப்பீடு, தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளதால், மீன் குத்தகை ஏலம் விடப்படாமல் உள்ளது.
தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ளதால், ஏரிகளில் நீர் வற்றிவிடும் முன், விரைந்து ஏரிகளை ஏலம் விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை மதுராந்தகம் உதவி செயற்பொறியாளர் நீள்முடியோன் கூறியதாவது:
விவசாயிகளுக்கான நீர் தேவை பயன்பாடு, ஏரி பரப்பளவு, நீர் இருப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஏலம் விடப்படும்.
ஏரிகளில் மீன் மகசூல் மதிப்பீட்டை வழங்க ஆணையாளர், மீன்பிடி மற்றும் மீனவர் நலன் ஒருங்கிணைந்த அலுவலகம்,- சென்னை மற்றும் உதவி இயக்குனர், மீன்வளத்துறை, காஞ்சிபுரத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.