/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது
/
கலை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது
ADDED : மார் 17, 2024 02:23 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கலைமன்றம் சார்பில், 2022 - -23, 2023- - 24ம் ஆண்டுகளுக்கான கலை துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், 30 விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், 66 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கான, 'கலைமுதுமணி' விருதை,பாலகிருஷ்ணன் - ஓவியம்,ஆறுமுகம் - தவில், சூரியா, கஸ்துாரி ஆகியோர் கிராமிய நாடகம், ஸ்ரீதரன் - மிருதங்கம், சந்திரன் - பம்பை, கைச்சிலம்பு.
மேலும், 51 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கலை நன்மணி விருதை வேதகிரி - நாடகம், ராஜிவி - கிராமிய நாடகம், சுப்பிரமணியன் - நாடகம், எழுத்தாளர் ராகவன் - நாதஸ்வரம், ஜெகநாதன் - பம்பை, கைச்சிலம்பு, சூரியநாராயணன் - மிருதங்கம்.
இதையடுத்து, 36 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 'கலைச்சுடர் மணி' விருதை, கோவிந்தசாமி - பம்பை, சிவகுமார் - பரதநாட்டியம், பாபு - சிலம்பாட்டம், சங்கர் - கஞ்சீரா, ஆசன் - தவில், டாக்டர் பத்ரிநாராயணன் - வயலின்.
தொடர்ந்து, 19 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டோக்கான 'கலைவளர்' விருதை, சிவராமன் - சிலம்பாட்டம், சண்முகம் - ஓவியம், நிர்மல் ஹரிஷ் - குரலிசை, ஜெயஸ்ரீ ரவிச்சந்திரன், ஹரிணிபாலாம்பிகா ஆகியோர் பரதநாட்டியம், அருண் விஸ்வேஷ்வரன் - நாதஸ்வரம்.
மேலும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான, 'கலை இளமணி' விருதை, ஷரோன் - சிலம்பாட்டம், சாய் அருண், சயாலி அஸ்லி ஆகியோர் ஓவியம், ஸ்ரீநிதி - பரதநாட்டியம்.
ஜனனி நாராயணன் - குரலிசை, கைச்சிலம்பாட்டத்தில் விஷ்வஜித் ஆகியோருக்கு, கலெக்டர் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விருதுகளை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வழங்கினார்.

