sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாரதிதாசன் பிறந்தநாளை உலக தமிழ்நாளாக அறிவிக்கும் விழா

/

பாரதிதாசன் பிறந்தநாளை உலக தமிழ்நாளாக அறிவிக்கும் விழா

பாரதிதாசன் பிறந்தநாளை உலக தமிழ்நாளாக அறிவிக்கும் விழா

பாரதிதாசன் பிறந்தநாளை உலக தமிழ்நாளாக அறிவிக்கும் விழா


ADDED : ஏப் 29, 2025 11:52 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்,புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை, உலக தமிழ்நாள் என அறிவிக்கும் விழா, திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.

தமிழியக்கம், அமெரிக்கா புரட்சி கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை, மும்பை லெமுரியா அறக்கட்டளை, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின.

வி.ஐ.டி., பல்கலை நிறுவனர் விசுவநாதன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

விழாவில், பாரதிதாசன் புகைப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பாரதிதாசன் குறித்த சிறப்புகள் திரையிடப்பட்டன. பாரதிதாசனின் பேரன் பாரதி எழுதிய,'நெருஞ்சி மலர்க்காட்டிடையே' எனும் நுால் வெளியிடப்பட்டது.

விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை, உலக தமிழ்நாள் என அறிவித்து அரசு அரசாணை வெளியிட வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி பேசினர்.






      Dinamalar
      Follow us