sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூதத்தாழ்வார் அவதார உற்சவம் மாமல்லையில் இன்று துவக்கம்

/

பூதத்தாழ்வார் அவதார உற்சவம் மாமல்லையில் இன்று துவக்கம்

பூதத்தாழ்வார் அவதார உற்சவம் மாமல்லையில் இன்று துவக்கம்

பூதத்தாழ்வார் அவதார உற்சவம் மாமல்லையில் இன்று துவக்கம்


ADDED : அக் 30, 2024 06:22 PM

Google News

ADDED : அக் 30, 2024 06:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், இன்று துவங்கி, நவ., 9ம் தேதி வரை நடக்கிறது.

முதலாழ்வார்களில் பூதத்தாழ்வார் குறிப்பிடத்தக்கவர். மாமல்லபுரத்தில் உள்ள நந்தவன தோட்ட குருக்கத்தி மலரில், ஐப்பசி மாத அவிட்டம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.

இத்தல இறைவன் ஸ்தலசயன பெருமாளை, அன்பே தகழியாய் என, போற்றிப் பாடியுள்ளார். ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதியில் வீற்றுள்ள நிலையில், ஆண்டுதோறும் அவரது அவதார உற்சவம், 10 நாட்கள் நடத்தப்படும்.

இந்த உற்சவம், இன்று துவங்கி, நவ., 9ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, கோவிலில், இன்று முதல், நவ., 6ம் தேதி வரை, தினசரி பிற்பகல் 2:00 மணிக்கு திருமஞ்சனம் நடத்தி, நாலாயிர பிரபந்தம், திருப்பாவை சாற்றுமறை என, சேவையாற்றுகின்றனர்.

பூதத்தாழ்வார், மாலை 5:00 மணிக்கு, மாடவீதிகளில் உலா செல்கிறார். கோவிலை அடைந்து, இரவு 7:00 மணிக்கு திருவாய்மொழி சேவையாற்றுகின்றனர். வரும் நவ., 10ம் தேதி, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

முக்கிய உற்சவங்கள்

நவ., 8ம் தேதி, காலை 5:30 - 6:30 மணிக்குள், திருத்தேரில் எழுந்தருளி, 8:00 மணிக்கு வடம் பிடித்து வீதியுலா புறப்பாடு நடைபெறும்.

நவ., 9ம் தேதி, அவதார ஜெயந்தி நாளில், காலை 6:00 மணிக்கு, திருமஞ்சனம், காலை 8:30 மணிக்கு, ரத்னாங்கி சேவை, பிற சுவாமியர் அவருக்கு மங்களாசாசனம், 11:00 மணிக்கு, தொல்லியல் வளாக ஞானபிரான் சன்னிதியில் மங்களாசாசனம், தொடர்ந்து வீதியுலா நடைபெறும்.

மாலை 4:00 மணிக்கு, அவதார ஸ்தல மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை, இரவு 8:00 மணிக்கு. ஸ்தலசயன பெருமாளுடன் வீதியுலா நடைபெறும்.






      Dinamalar
      Follow us