/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : மே 06, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்,
காஷ்மீரில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் 26 பேரை, பயங்கரவாதிகள் சுட்டு படுகொலை செய்தனர். இதை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தேரடி தெருவில், பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, உலக நாடுகளை அச்சுறுத்தும் செயல்களை செய்து வரும் பாகிஸ்தானுக்கு, இந்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.