sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத கருங்குழி எரிவாயு தகன மேடை

/

6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத கருங்குழி எரிவாயு தகன மேடை

6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத கருங்குழி எரிவாயு தகன மேடை

6 மாதமாக பயன்பாட்டிற்கு வராத கருங்குழி எரிவாயு தகன மேடை


ADDED : பிப் 19, 2024 05:01 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், : கருங்குழி, அச்சிறுபாக்கம் பேரூராட்சிகளில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2022- - 23ம் ஆண்டில், தலா 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கூடிய எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.

கட்டுமானப் பணிகள் முடிந்து ஆறு மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் கூறியதாவது:

கருங்குழி பேரூராட்சி, அச்சிறுபாக்கம் பேரூராட்சிகளில் நவீன எரிவாயு தகன மேடைக்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

உடல்களை எரிக்கும் போது, காற்றில் பரவும் புகையின் நச்சுத் தன்மையின் அளவை கண்டறிந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்று பெற வேண்டும்.

இதற்கான பரிசோதனைக்காக, அடையாளம் காணப்படாத கேட்பாரற்ற உடலுக்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து கடிதம் எழுதி, வலியுறுத்தி வருகிறோம்.

மேலும், கருங்குழி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், உறவினர்களின் அனுமதியுடன் உடல்களை பெற்று, எரியூட்டி, நச்சுப் புகையின் தரம் அறிவதற்கான பரிசோதனை செய்ய, கவுன்சிலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us