ADDED : டிச 07, 2024 08:24 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த காயார் காவல் எல்லைக்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் காயார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குமுழி ஊராட்சியை சேர்ந்த மணி மகன் அருள், 32, கார் ஓட்டுநர் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 3 ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஏரியில் சடமலமாக கிடந்தது தெரிந்தது.
பல்வேறு கோணங்களில் காயார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.